Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Thursday, December 10, 2009

கருணாநிதி சிந்தனைகள் பாடமாவது குறித்து ஞாநி

மூன்று மனக் குடைச்சல்கள்:

மனக் குடைச்சல் 1:

.எல்.முதலியார், நெ.து.சுந்தரவடிவேலு, மால்கம் ஆதிசேஷையா, தெ.பொ.மீனட்சிசுந்தரனார்,மு.வரதராசன் போன்றெல்லாம் துணைவேந்தர்கள் இனி வரவே போவதில்லை என்று உணரும்போது பெரும் மனக் குடைச்சலாக இருக்கிறது.

அரசியல் செல்வாக்கு, பணம் இவை இரண்டும் மட்டும்தான் துணை வேந்தர் நியமனங்களில் இன்று செல்லுபடியாகக்கூடியவை. இரண்டு துணை வேந்தர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணையில் இருக்கின்றன.

பதவி ஏற்றதுமே ஒரு துணைவேந்தர் அறிவித்தார். முதல்வர் கலைஞர் கருணாநிதியின் அனைத்துப் படைப்புகளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நோபல் பரிசுக்கான கமிட்டிக்கு அனுப்பி வைக்கும் பணியை அவரது பல்கலைக்கழகம் செய்யுமாம்.

இப்போது புது நியமனமாகியிருக்கும் ஒரு துணைவேந்தர் அறிவித்திருக்கிறார். பெரியார், அண்ணா, கலைஞர் மூவரின் சிந்தனைகள் பற்றியும் தனித்தனியே முதுகலைப் படிப்பை அவரது பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்துமாம். பெரியார் - சரி. சுயமான சிந்தனையாளர் . அவர் சிந்தனைகளைப் படிப்பது பயனுள்ளதுதான். அண்ணா - பெரியார் அளவுக்கு வரமாட்டார் என்றாலும் பரவாயில்லை. இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் கலைஞர் ? - அவருடைய சுயமான சிந்தனை எல்லாமே சுயநலச் சிந்தனைகளக மட்டும் இருந்ததுதானே 50 ஆண்டு காலப் பொது வாழ்க்கை வரலாறு ? என்ன பாடத்திட்டம் போடுவார்கள் ?

நேர்மையாக போடுவதானால் இப்படித்தான் போடவேண்டும்: செமஸ்டர் 1: குடும்பவியல் சிந்தனைகள்: இந்திய அரசியல் வரலாற்றில் முதல்முறையாக அரசு உயர் பதவியில் இருப்பவருக்கு மனைவி- துணைவி என்ற இரு உறவுகள் இருப்பதைப் பொது மக்கள் இயல்பாக ஏற்றுக் கொள்ளும் கருத்தாக்கங்களாக எப்படி நடைமுறைப்படுத்தினார் என்று ஆராயப்படும். சொந்த வாரிசுகள், மருமான் குடும்ப வாரிசுகள் ஆகியோரிடையே ஏற்படும் முரண்பாடுகளை களைந்து அனைவரும் பதவி, அதிகாரங்களை எப்படி எந்த விகிதத்தில் பகிர்ந்து அளித்தால் சமாதான சகவாழ்வு சாத்தியப்படும் என்ற குடும்பத் தலைவரின் சாணக்கிய சிந்தனைக் கூறுகளை ஆராயப்படும்.

செமஸ்டர் 2: கட்சி அமைப்புச் சிந்தனைகள்: உட்கட்சி ஜனநாயகம் என்பது எல்லாரும் உயர் பதவிக்கு வரும் வாய்ப்பை ஏற்படுத்துவதல்ல; மாறாக எல்லாருக்கும் ஆட்சி அதிகார சுகங்களில் அவரவர் நிலைக்கேற்ற பங்குகளை அனுபவிக்க வழி வகுப்பது என்ற அடிப்படையில் ஊழலில் ஜனநாயக சோஷலிசத்தை அறிமுகம் செய்த பாங்கு ஆராயப்படும். சயண்ட்டிஃபிக் கரப்ஷன் என்ற சொற்றொடர் நீதிபதி சர்க்கரியா மூளையில் உதயமாவதற்கு உந்துதலாக இருந்த அம்சங்கள் தனியே ஆராயப்படும்.

செமஸ்டர் 3: மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்ற சமஷ்டி சித்தாந்த சிந்தனைகள் : மாநிலத்தில் சுயநல ஆட்சி தொடரும் விதத்தில், பாதிக்கப்படாத விதத்தில் மத்தியில் உள்ளோர் அனுமதிக்கும் வரை அவர்களுடைய சிந்தனைகளை நம் சிந்தனைகளாக எப்படி சுவீகரித்துக் கொண்டு கூட்டாட்சி நடத்தலாம் என்பது பற்றி ஆராயப்படும். அணி மாறி அந்தர் பல்டி அடிப்பதை ராமதாஸ் போல அபத்தமாகச் செய்து அம்பலமாகாமல், பண்டாரம் பரதேசி முதல் பண்டிதரின் பாரம்பரியம் வரை இலகுவாக மாறி மாறி கூட்டு சேரும் உத்திகளை ஆராயப்படும்.

செமஸ்டர் 4: மொழிச் சிந்தனைகள் : ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை தாய்மொழிக்கல்வியை குழி தோண்டி புதைத்து விட்டு, அந்தக் கல்லறை மீது அமர்ந்து எப்படி கண்ணீர் வடிப்பது என்ற பிராக்டிகல் வகுப்புகள் இந்த செமஸ்டரில் இடம் பெறும். திரைப்படத்துக்கு தமிழ்ப் பெயரிட்டால் வரி விலக்கு என்று அறிவித்துவிட்டு, (வாரிசுகள் நடத்துவதால்) பட தயாரிப்பு நிறுவனங்களின் பெயர்களுக்கு மட்டும் மொழி விலக்கு அளிக்கும் முரண்பாடுகள் மக்கள் கண்ணில் உறுத்தாமல் அவர்கள் கவனங்களை மானாட மயிலாட போன்ற பண்பாட்டு நிகழ்ச்சிகள் வாயிலாகத் திருப்புவது எப்படி என்ற உத்திகள் ஆராயப்படும். தமிழ் படித்த கவிஞர்கள், புலவர்கள், அறிஞர்கள் எல்லாருக்கும் எப்படி அரச்னை அண்டிப் பிழைத்து பரிசுகள் வாங்கும் தமிழ் மரபை 22ம் நூற்றாண்டிலும் கைவிடாமல் காப்பாற்றவேண்டும் என்று கற்றுத்தருவதற்காக அவ்வப்போது தன்னைப் பற்றிய கவியரங்குகள், பட்டி மன்றங்கள் ஏற்பாடு செய்து பாடம் புகட்டும் பாங்கு ஆராயப்படவேண்டும்.

செமஸ்டர் 5: பகுத்தறிவுச் சிந்தனைகள் :ஒவ்வொரு முறை ஊழல் பற்றியோ அராஜகம் பற்றியோ, நிர்வாக முறைகேடு பற்றியோ, முணுமுணுப்பாக விமர்சனக்கள் எழும்போதெல்லாம், அவற்றிலிருந்து மக்கள் கவனத்தை திருப்ப எப்படி பகுத்தறிவைப் பயன்படுத்தலாம் என்பது பற்றிய தந்திரோபாய சிந்தனைகள் ஆராயப்படவேண்டும். சூத்திரர் ஆட்சி, நெஞ்சில் தைத்த முள் போன்ற காவியச் சொற்கள் எப்படி முகமூடிகளாகப் பயன்படக்கூடியவை என்பது பற்றிய பிராக்டிகல் வகுப்புகள் இந்த செமஸ்டரில் இடம் பெறும். புரட்சிகரமான அறிவிப்பை அரசு மூலம் செய்துவிட்டு அதை நீதி மன்றத்தில் வழக்குகளின் மூலம் முடக்கிவிட தந்திரமாக வழி வகுத்துக் கொடுப்பதற்கு எப்படி பகுத்தறிவை பயன்படுத்தலாம் என்பது இந்த செமஸ்டரின் ஹைலைட்.

இன்னும் ஏழு செமஸ்டர்களுக்கு வேண்டிய சரக்குகள் இருப்பதால், பாடத் திட்டத்தை இளங்கலையிலிருந்தே தொடங்கி முதுகலை, முனைவர் பட்டம் வரை விரிவுபடுத்தலாம் என்று துணை வேந்தருக்கு பரிந்துரைக்கிறேன். படிக்கிறவனுக்கு எண்ட்டர்டெயின்மெண்ட்டாகவாவது பாடம் இருக்கட்டும்.

மனக் குடைச்சல் 2:

படித்த நடுத்தர வர்க்கத்தினர் துளியும் சமூக அக்கறையற்றவர்களாக நடமாடுவதைக் காணும்போதெல்லாம் இது எப்போதுதான் மாறும் என்ற மனக் குடைச்சல் அதிகமாகிறது.

மேற்கு வங்கத்தின் மூர்ஷிதாபாதில் 16 வயது சிறுவன் பாபர் அலியின் சாதனையைப் படித்தபோது நெஞ்சு நெகிழ்கிறது. வீட்டிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அரசுப் பள்ளிக்குப் போய் படித்துவிட்டு வரும் பாபர் அலி வீடு திரும்பியதும் அங்குள்ள குழந்தைகளுக்குப் பாடம் கற்பிக்கிறான். ஒன்பது வயதில் டீச்சர்- ஸ்டூடண்ட் விளையாட்டாக அவன் தொடங்கிய இந்த பள்ளிக்கூடம் இன்று வேலைக்குப் போய் திரும்பி வரும் 600 குழந்தைகளுக்கான பாடசாலையாகிவிட்டது. பாபரும் அவன் நண்பர்களும் தாங்கள் படித்ததை இங்கே வந்து சொல்லித் தருகிறார்கள்.

இதைப் பற்றி பி.பி.சி தொலைக்காட்சி படமெடுத்துக் காட்டினதும்தான் நமக்குத் தெரியவருகிறது. நம் தொலைக்காட்சிகளுக்கு இந்த மாதிரி நிகழ்ச்சிகளே தேவையில்லையே. குழந்தைகளை அழவைத்து சூப்பர்ர் சிங்கராக்கி டி.ஆர்.பி ரேட்டை எப்படி ஏற்றுவது என்பதில்தான் நிலையங்கள் அக்கறையாக இருக்கின்றன. அதற்கு நாம் குடும்பம் குடும்பமாக ஒத்துழைக்கிறோம்.

தீபாவளி அன்று ஆயிரக்கணக்கான ரூபாய் செலவில் பட்டாசுகள் கொளுத்திய குடும்பங்களை ஒவ்வொரு தெருவிலும் கண்டேன். ஒரு வீட்டில், பாபர் அலி வயதுச் சிறுமி பட்டாசைக் கொளுத்தி தெருவில் இருக்கும் நீல் மெட்டல் பனால்கா குப்பைத் தொட்டியில் போடுகிறாள். குடும்பமே அதை ரசித்துக் கொண்டு நிற்கிறது. சமூகத்தின் அடிமட்டத்தில் இருக்கும் பாபர் அலியோ தனக்குக் கிடைத்த வாய்ப்பு கூட கிடைக்காதவர்களுக்காக தன் நேரத்தை செலவிடுகிறான்.

நடுத்தர வர்க்கம் தன் மனசாட்சியை மயக்கத்திலிருந்து எழுப்புவது எப்போது ?

மனக் குடைச்சல் மூன்று:

எந்த நாளும் நிலைத்திடும் நூலொன்றுமில்லை என்பான் பாரதி. உண்மைதான். சில அடிப்படை மனித உணர்ச்சிகளை சொல்லும் படைப்புகள் மட்டுமே எந்த நாளிலும் அர்த்தமுள்ளதாகத் தோன்றும். மற்றவை காலத்துக்குப் பொருந்தாதவையாக ஆகிவிடும்.

28 வருடங்களுக்கு முன்பு நான் எழுதி எங்கள் பரீக்‌ஷா குழுவினர் நடித்த பலூன் என்ற நாடகத்தை இந்த வாரம் அக்டோபர் 25 ஞாயிறு அன்று மதியம் சென்னை அலையன்ஸ் பிரான்சே அரங்கில் நடத்தப் போகிறோம். ஒரு படைப்பை பல வருடம் கழித்து மறுபடியும் நிகழ்த்தும்போது படைப்பின் காலப் பொருத்தம் பற்றிய சிந்தனை மனதைக் குடைவது வழக்கம்.

அநியாயமான பஸ் கட்டண உயர்வை எதிர்த்துப் போராடும் ஆறு லட்சியவாதிகள் பற்றிய நாடகம் அது. வித்யாசமாகப் போராடுகிறார்கள். கடுமையாக தண்டிக்கப்படுகிறார்கள். நையாண்டி வடிவத்தில் கோர்ட் ரூம் நாடகமாக எழுதப்பட்டது. இப்போது அதில் நடிக்கும் பெரும்பாலோர் அது எழுதப்பட்டபோது பிறக்கவே இல்லை. எழுபதுகளின் எண்பதுகளின் லட்சியவாதம் என்ன என்பதைப் புரிந்துகொள்ளவே இன்றைய தலைமுறை சிரமப்பட வேண்டியிருக்கும். ( முப்பது நாற்பதுகளை புரிந்துகொள்ள எழுபதின் இளமைகள் சிரமப்பட்டதைப் போல.)

அப்போதுதான் தோன்றியது . நாடகத்தில் வரும் லட்சியவாதிகள் எண்பதுகளைச் சேர்ந்தவர்கள். இப்போது அவ்ர்கள் என்ன ஆகியிருப்பார்கள் ? என்னென்னவோ ஆகியிருக்கலாம். அதையும் ஒரு காட்சியாக எழுதி இப்போது சேர்த்தபிறகுதான் நாடகம் இன்றைய சூழலுக்குப் பொருந்திவருவதாக தோன்றியது.

ஏன் 2009ன் இளைஞர்கள் 1980களின் இளைஞர்கள் போல் இல்லை ? (பெரியவர்களும்தான்.) மனதைக் குடையும் விஷயங்களில் இதுவும் ஒன்று.

இந்த வாரப் பூச்செண்டு:

பொருளாதார மந்தம் என்பது எங்களை எதுவும் செய்யாது என்று நிரூபிப்பது போல நடுத்தர , பணக்கார வர்க்கம் தீபாவளி அன்று சென்னை நகரில் குவித்த சுமார் ஆயிரம் டன் கூடுதல் குப்பையை அகற்றும் பணியில் எந்த ஊதிய உயர்வும் இல்லாமல் ஈடுபட்டிருக்கும் பெயர் தெரியாத அத்தனை துப்புரவுத் தொழிலாளர்களுக்கும் இ.வா.பூ.

இந்த வார திட்டு:

என் அனுமதி இல்லாமலும், குமுதம் இதழில் வெளிவந்தது என்ற குறிப்பும் இல்லாமலும், பக்கக் கட்டுரையில் தன்னைப் பற்றிய விமர்சனத்தை ஒதுக்கிவிட்டு சினிமாக்காரர்கள் பற்றிய விமர்சனத்தை மட்டும் எடுத்து வெளியிட்டு பத்திரிகை தர்மத்துக்கு விரோதமாக நடந்துகொண்டிருக்கும் தினமலர் ஏட்டுக்கு இ.வா.தி.

இந்த வாரத் தகவல்:

லுங்கி கட்டிக் கொண்டு கமலா தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வந்துவிட்டேன்.

குமுதம் 18.10.2009

தமிழகத்தின் இரண்டாம் கட்ட அரசியல் தலைவர்கள் பற்றி ஞாநி

அத்து மீறு..... அடங்க மறு....

தமிழக அரசியலில் எம்.ஜி.ஆருக்குப் பிறகு பெருமளவில் இளைஞர்களைக் கவர்ந்திழுத்து தானும் ஒரு அரசியல் சக்தியாக உருவானவர்கள் இரண்டே பேர்தான். ஒருவர் வை.கோ. இன்னொருவர் தொல்.திருமாவளவன்.

இன்று தமிழகத்தில் அரசியல் அரங்கில் பரிதாபத்துக்குரியவர்களாக தங்களை ஆக்கிக் கொண்டிருப்பவர்களும் இதே இருவர்தான். வைகோ வேறு வழியின்றி ஜெயலலிதா அணியில் ஒட்டிக் கொண்டிருப்பவராகவும், திருமா அதே போல வேறு வழியின்றி கருணாநிதி அணியில் ஒட்டிக் கொண்டிருப்பவராகவும் காட்சி தருகிறார்கள்.

ஏன் இப்படி நிகழ்ந்தது ?

கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மாற்று தேவை என்ற உணர்வு பரவலாகிக் கொண்டிருந்த காலகட்டத்தில் வைகோ கவனத்துக்குரிய தலைவராக நுழைந்தார். ஜெயலலிதாவின் சித்தாந்தமற்ற அரசியலோடு எரிச்சலடைந்தும், கருணாநிதியின் சித்தாந்தப் பூச்சிலான சுயநல அரசியலோடு வெறுப்படைந்தும் இருந்த ஏராளமான தமிழ் இளைஞர்களுக்கு வைகோ நம்பிக்கை நட்சத்திரமாகத் தோன்றினார்.

ஆனால் அவரால் தி.மு.க போல ஒரு வலுவான கட்சி அமைப்பை உருவாக்கவே முடியவில்லை. அதை செய்யக்கூடிய அடுத்த நிலைத் தலைவர்களையும் அவரால் உருவாக்க முடியவில்லை. தன்னுடைய பேச்சாற்றல் என்ற ஒன்றைத் தவிர வேறு எந்த ஆயுதமும் இல்லாதவராக அவர் இருந்தார்.

அந்தப் பேச்சாற்றலையும் தமிழகத்தின் பிரதான பிரச்சினைகளில் மக்களைத் திரட்ட அவரால் பயன்படுத்த முடியவில்லை. ஈழத்தமிழர் சிக்கல், புலிகள் ஆதரவு என்பவற்றோடு மட்டுமே அடையாளப்படுத்தப்படுபவராக தன்னைத்தானே அவர் சுருக்கிக் கொண்டார்.

தி.மு.க, அ.தி.மு.க இரண்டுக்கும் மாற்றான காங்கிரசல்லாத மூன்றாவது அணி ஒன்றைத் தலைமையேற்று உருவாக்க்க் கூடிய வாய்ப்பை வைகோவால் திறம்படக் கையாளமுடியாமலே போய்விட்டது. அதற்கு மாறாக அடிக்கடி அணி விட்டு அணி மாறுபவராகவும் அப்படி மாறினாலும் அதனால் ராமதாஸ் போல ஆதாயம் அடையத்தெரியாத அசட்டு அரசியல்வாதியாகவும் தன்னைத் தானே வடிவமைத்துக் கொண்டுவிட்டார்.

வைகோவின் வருகைக்கு சுமார் பத்தாண்டுகள் பின்னர் அதமிழக அரசியலில் கவன ஈர்ப்பு இடத்தை அடைந்தவர் தொல். திருமாவளவன். வைகோவை விட திறமையோடு கட்சி அமைப்பை உருவாக்கியவர் திருமா. அதுவரை இருந்து வந்த தலித் அரசியலின் தன்மையையே மாற்றியவர் திருமா. பெரிய கட்சிகளின் மாணவர் பிரிவு, மகளிர் பிரிவு போல தலித் பிரிவு, தலித் செல், தலித் கமிட்டி என்று ஒன்று இருந்துவிட்டுப் போகலாம் என்றிருந்த அரசியலில் தலித் இயக்கத்தை தனிக் கட்சியாகக் கட்டிய பெருமை டாக்டர் கிருஷ்ணசாமிக்கும் திருமாவுக்கும் மட்டுமே உண்டு. அதில் அவர்களுக்கு மாடலாக அமைந்தவர் வன்னிய சாதி அமைப்பைக் கட்சி அமைப்பாக மாற்றிய மருத்துவர் ராமதாஸ் என்று சொல்லலாம்.

ஆனால் திருமா இதர தலித் தலைவர்களை விட தனித்துவம் மிகுந்தவராக இருந்தார். பேச்சாற்றல் அதில் முதன்மையானது. படிப்பாற்றலும், திராவிட இயக்க, பொதுவுடைமை இயக்கக் கூறுகளின் தாக்கமும் அவருக்கு இருந்த கூடுதல் பலங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக தலித் இளைஞர்களின் நீறு பூத்த நெருப்பாக இருந்த கோபத்துக்கு அமைப்பு ரீதியான வடிகாலும், கொள்கைப் பூச்சும் அளித்தவர் அவர்தான்.

தங்களை ஒடுக்கும் அமைப்புக்கு எதிராக கலகம் செய்தாலன்றி விடுதலை பெற முடியாது என்பதையே அரசியல் வழிமுறையாக ஆக்கி ‘அத்து மீறு அடங்க மறு’ என்று திருமா முன்வைத்த முழக்கம்தான் தலித் இளைஞர்களைத் திரட்டியது.

ஆனால் இதற்கு மேல் திருமாவால் செல்ல முடியவில்லை. அவரும் வைகோவைப் போலவே தன்னை ஈழத்தமிழர் சிக்கல், புலிகள் ஆதரவு முதலியவற்றுக்கே முன்னுரிமை தருபவராக அடையாளப்படுத்திக் கொண்டார். மாறி மாறி தி.மு.க, அ.தி.மு.க இரு அணிகளிலும் இடம் பெறுபவராகவும் அபடி மாறினாலும் அதனால் ராமதாஸ் போல பெரிய ஆதாயங்களை அடையத் தெரியாத அசட்டு அரசியல்வாதியாகவும் முற்றிலும் வைகோ பாணியிலேயே திருமாவின் அரசியலும் அமைந்துவிட்டது.

தலித் அடையாளத்தை விட ஈழத்தமிழர் ஆதரவு அடையாளத்தை கடந்த சில வருடங்களில் பிரதானப்படுத்தியதன் விளைவாக திருமாவின் தலித் அரசியல் பலவீனமடைந்துவிட்டது. பல்வேறு தலித் இயக்கங்களை ஒன்றுபடுத்தி அடுத்த கட்டத்துக்கு தலித் அரசியலை எடுத்துச் செல்ல அவரல் முடியவில்லை.

இப்போது ஈழத்தமிழர் சிக்கலிலும், அவர் எடுத்திருக்கிற நிலைகள் அவரை தமிழ் தேசிய ஆதரவாளர்கள் மத்தியிலும் அருவெறுப்புக்குள்ளாக்கிவிட்டன.

’அத்து மீறு அடங்க மறு’ என்பது புரட்சிகரமான அரசியல் முழக்கம் அல்ல; கட்டைப் பஞ்சாயத்துக்கு மட்டுமேயானது என்ற அவல நிலைக்கு வந்துவிட்டது. சமூகத்துக்கு திருமாவின் மிகபெரிய பங்களிப்பு என்பது பிளெக்ஸ் விளம்பரப் பலகைத் தொழிலுக்கு உத்வேகமும் வணிகமும் ஏற்படுத்திக் கொடுத்ததுதான் என்று சரித்திரம் குறிக்கக்கூடிய அபாயம் ஏற்படுமளவுக்கு இன்று வேறெந்த சினிமா நடிகரை விடவும் திருமாவுக்கே அதிகமான கட் அவுட்டுகள் தமிழகமெங்கும் இருக்கின்றன. பாலாபிஷேகம் மட்டும்தான் பாக்கி.

இலங்கைக்குச் சென்று யுத்த அகதிகள் முகாம்களைப் பார்வையிட அனுப்பப்பட்ட தி.மு.க கூட்டணி எம்.பிகள் குழுவில் சென்ற திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவரா, விடுதலைப் பூனைக் குட்டிகள் அமைப்பின் தலைவரா என்ற சந்தேகம் தோன்றும் நிலை ஏற்பட்டுவிட்டது. தமிழ்நாட்டில் மேடைக்கு மேடை அவர் பேச்சில் அகதிகள் முகாமில் இருக்கும் தமிழ்ப் பெண்களிடம் சிங்கள ராணுவம் பாலியல் அத்து மீறல்கள் செய்வதாகவும் தமிழ் இளைஞர்கள் கடத்திக் கொல்லப்படுவதகவும் பேசி வந்தவர், இந்த இரு விஷயங்களைப்பற்றியும் ராஜபக்‌ஷேவை சந்தித்தபோது முணுமுணுக்கக் கூட இல்லை. ஏன் முணுமுணுக்கக்கூட இல்லை என்று கேட்டால், குழுத்தலைவர் டி.ஆர்.பாலு திருமாவுக்கு வாய்ப்பூட்டு போட்டுவிட்டதாக விளக்கம் வருகிறது. அத்து மீறு அடங்க மறு என்பதெல்லாம் அப்பாவி தலித் தொண்டனுக்கு மட்டும்தானா? ஆதிகக் ஜாதிகளுக்கு எதிராக அத்து மீறலாம் அடங்க மறுகலம். ஆனால் டி.ஆர்.பாலுக்களுக்கு அடங்கிப் போய்விடுவதுதான் தன் போன்ற தலித்துகளுக்கு நல்லது என்பதுதான் திருமாவின் இலங்கைப் பயணம் அளித்திருக்கும் செய்தி.

வைகோவுக்கும் திருமாவுக்கும் அரசியலில் ஏற்பட்ட கதி அரசியல் ஆய்வாளர்களின் விரிவான ஆழமான ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டியதாகும். ஏனென்றால் சீரழிவு சக்திகளுக்கு எதிராக தொடங்கும் கலக அரசியல் தானும் சீரழிந்து போவது ஏன் என்பதை அறிவதில்தான் அடுத்த பத்தாண்டுகளுக்கான அரசியல் அடங்கி இருக்கிறது.

இன்னும் ஐந்தாறு வருடங்களில் கலைஞர் கருணாநிதி தொண்ணூறைத் தாண்டும் வேளையில் அவர் தமிழகத்தின் முக்கிய அரசியல் சக்தியாக இருக்கப்போவதில்லை. அவருடைய விலகலால் ஏற்படப் போகும் வெற்றிடத்தை நிரப்பப் போகும் அரசியல் சக்திகள் யார் ? எவை? எப்படிப்பட்டவை என்பது பற்றி அக்கறை உள்ள ஒவ்வொருவரும், வைகோவுக்கும் திருமாவுக்கும் நேர்ந்த கதியிலிருந்து படிப்பதற்கு நிறைய பாடங்கள் இருக்கின்றன.


இந்த வாரப் பூச்செண்டு:

உயர் நீதிமன்ற நீதிபதிகள் நடந்து வரும்போது முன்னால் வெள்ளிச் செங்கொல் தூக்கிக் கொண்டு பணியாள் செல்லும் வழக்கத்தை ஒழித்திருப்பதற்காக கேரள உயர்நீதிமன்றத்துக்கு இ.வா.பூச்செண்டு.

இந்த வாரத் திட்டு:

பஸ் விபத்துகளில் பாதிக்கப்பட்ட 11 ஆயிரம் குடும்பங்களுக்கு தரவேண்டிய 324 கோடி ரூபாயைத் தராமல் வருடக்கணக்கில் ஏய்த்துக் கொண்டிருக்கும் தமிழக அரசின் போக்குவரத்துக் கழகங்களுக்கு இ.வா.தி.

குமுதம் 2.11.2009

ஞாநியின் ஓ பக்கங்களில் பாபர் மசூதி இடிப்புக்கான காரணம் பற்றிய அறிக்கையை முன்வைத்து

ஊரறிந்த ரகசியங்கள் -3

ரகசியம் 1:

பதினேழு வருட விசாரணைக்குப் பின் நீதிபதி லிபரான் கமிஷன் அயோத்தி பாபர் மசூதி இடிப்புக்கு யார் காரணம் என்பது பற்றிய அறிக்கையை அளித்திருக்கிறது.

இதில் சொல்லப்பட்டிருக்கிற எந்த விஷயமும் புதிது அல்ல. ஏற்கனவே ஊரறிந்த ரகசியம்தான். ஆர்.எஸ்.எஸ் வருடக் கணக்கில் திட்டமிட்டு தன்னுடைய பல்வேறு அவதாரங்களான விஸ்வ ஹிந்து பரீஷத், பஜ்ரங் தளம், பி.ஜே.பி போன்றவற்றின் மூலமாக 1992ல் பாபர் மசூதியை இடித்துத் தள்ளியது. இதுதான் சாராம்சம்.

ஊரறிந்த ரகசியங்கள்

- 3

ரகசியம் 1:

பதினேழு வருட விசாரணைக்குப் பின் நீதிபதி லிபரான் கமிஷன் அயோத்தி பாபர் மசூதி இடிப்புக்கு யார் காரணம் என்பது பற்றிய அறிக்கையை அளித்திருக்கிறது.

இதில் சொல்லப்பட்டிருக்கிற எந்த விஷயமும் புதிது அல்ல. ஏற்கனவே ஊரறிந்த ரகசியம்தான். ஆர்.எஸ்.எஸ் வருடக் கணக்கில் திட்டமிட்டு தன்னுடைய பல்வேறு அவதாரங்களான விஸ்வ ஹிந்து பரீஷத், பஜ்ரங் தளம், பி.ஜே.பி போன்றவற்றின் மூலமாக 1992ல் பாபர் மசூதியை இடித்துத் தள்ளியது. இதுதான் சாராம்சம்.

ஆர்.எஸ்..எஸ்சின் அணுகுமுறை சிக்கலும் நுட்பமும் மிகுந்த உத்திகளை தொலை நோக்குப் பார்வையுடன் செயல்படுத்துவதாகும். அது உருவாக்குகிற ஒவ்வொரு அமைப்பும் வெவ்வேறு வழிமுறைகளைப் பின்பற்றி ஒரே ஸ்வ நோக்கத்தை நோக்கி இயங்கக்கூடியவை. விஸ்வ ஹிந்து பரீஷத் ஆன்மிக வேஷம் கட்டி வரும். இளம் பக்தர்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு அவர்களைக் காலாட்படையாகப் பயன்படுத்துவதற்கு பஜ்ரங் தளம். அரசியல் களத்தில் ஆதரவைத் திரட்டுவதற்கு பி.ஜே.பி. அதற்குள்ளும் மிதவாதி, தீவிரவாதி என்று இரு பிரிவினர் இருப்பது போல போலித் தோற்றம் காட்டப்படும், ஆட்சி அதிகாரத்தை ஆங்காங்கே கைப்பற்றுவதற்காக இந்த உத்தி.

இரு வாதிகளின் இறுதி நோக்கமும் ஒன்றேதான்.

இப்படி ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டு செயல்பட்டு மசூதியை இடித்த வரலாற்றை லிபரான் கமிஷன் ஆதாரப்பூர்வமாக பதிவு செய்திருக்கிறது. இந்த இடிப்பு வேலையை செய்து முடிப்பதில் எப்படி வெவ்வேறு தலைவர்கள் வெவ்வேறு விதமாக செயல்பட்டார்கள் என்பதை கமிஷன் துல்லியமாக சுட்டிக் காட்டியிருக்கிறது.

மசூதி இருக்கும் இடத்தில் ராமர் கோவில் கட்டுவதுதான் இந்த தேசத்தின் கனவு என்று முழங்கிய அத்வானிகள் ஒரு பக்கம். அந்த இடம் மேடும் பள்ளமுமாக இருக்கிறது. அதை இடித்து சமன் செய்துவிட்டால், நாம் அங்கே உட்கார்ந்து தியானம் செய்யலாம் என்று பூடகமாகப் பேசிய வாஜ்பாயி போன்றமிதவாதிகள் இன்னொரு பக்கம்..

ரவுடி சாமியார்கள், சாதுவான சாமியார்கள், ரவுடித்தனமான அரசியல் தலைவர்கள், சாதுவான அரசியல் தலைவர்கள், மீடியாவுக்குள் பத்திரிகைகளுக்குள் ஊடுருவி தங்களுக்கு சாதகமான கருத்தைப் பரப்புபவர்கள், எதிர்க் கருத்துள்ள மீடியா பத்திரிகைக்காரர்களை மிரட்டி அடித்து உதைப்பதற்கான கர சேவகர்கள் என்று பலதரப்பட்டவர்களை ஆர்.எஸ்.எஸ் பயன்படுத்தியிருப்பதை லிபரான் அறிக்கை வெளிப்படுத்துகிறது.

அரசியலிலும் பொது வாழ்க்கையிலும் இருப்பவர்கள், விமர்சகர்கள், தொடர்ந்து அரசியலை கவனித்து வரக்கூடிய காமன் சென்ஸ் உள்ள பொது மக்கள் எல்லாருக்கும் இந்த உண்மைகள் எப்போதுமே தெரிந்தவைதான். முதல்முறையாக ஒரு சட்டபூர்வமான விசாரணைக் கமிஷன் இதையெல்லாம் ஆவணப்பூர்வமாக பதிவு செய்திருப்பதுதான் லிபரானின் சாதனை.

கமிஷன் அறிக்கையை அரசு வெளியிடுவதற்கு முன்னரே அது பத்திரிககளில் கசிந்ததை ஒரு பிரச்சினையாக்கி குளிர் காய பி.ஜே.பி சங்க பரிவாரங்கள் முயற்சிக்கின்றன. ஜனநாயக அமைப்பில் அரசின் செயல்பாடுகள், விசாரணை அறிக்கைகள் எதுவும் ரகசியமாக இருக்கக் கூடாது. இருந்தால் அதை அம்பலப்படுத்துவதுதான் சரி. எம்.ஜி.ஆர் ஆட்சியில் 1982ல் திருச்செந்தூர் கோவில் அதிகாரியின் மர்ம சாவு பற்றிய பால் கமிஷன் அறிக்கையை அப்போது எதிர்க்கட்சித் தலைவரான கலைஞர் கருணாநிதி அம்பலப்படுத்தினார். அதற்காக இப்போது கலைஞரின் செயலராக இருக்கும் சண்முகநாதன் உள்ளிட்ட சில அதிகாரிகள் மீது எம்.ஜி.ஆர் அரசு மோசமான பழி வாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. ( அப்போது தி.மு.கவால் வைரவேல் திருடன் என்று வர்ணிக்கப்பட்ட அன்றைய அறநிலைய அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் இப்போது கலைஞரின் விஸ்வாச ஜால்ரா என்பது தனிக்கதை.)

லிபரான் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் தகவல்களிலிருந்து கவனத்தை திசை திருப்ப பி.ஜே.பி பல விதங்களில் முயற்சிக்கிறது. என்ன முயற்சித்தாலும் அப்போது உத்தரப் பிரதேச மாநிலத்தில் பி.ஜே.பியின் முதல்வராக இருந்த கல்யாண் சிங்கின் ஆட்சி மசூதி இடிப்புக்கு முழு உதவி செய்ததை மறைக்க முடியாது. அப்போது கல்யாண்சிங் டெல்லியில்காங்கிரஸ் பிரதமராக இருந்த நரசிம்மராவையும் உச்ச நீதி மன்றத்தையுமே முட்டாள்களாக்கிய வரலாற்றை மறைக்க முடியாது. வாஜ் பாயி முதல் அத்வானி வரை அசோக் சிங்கல் முதல் உமாபாரதி வரை மசூதி இடிப்புக்கு அவரவர் பங்கை முழு அர்ப்பணிப்புடன் செலுத்தியதை மறைக்க முடியாது.

லிபரான் கமிஷன் அறிக்கையில் மிகப் பெரிய ஏமாற்றம் ஒன்றே ஒன்றுதான். குற்றவாளிகள் யார் யார் என்று பட்டியலிட்டுவிட்டு, அவர்கள் மீது சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லாமல் விட்டுவிட்டதுதான் வருத்தமாக இருக்கிறது.

ரகசியம் 2

கிரெடிட் கார்டுகளை ஏன் கிரெடிட் கார்ட் கம்பெனிகள் ஊக்குவிக்கின்றன என்பது இன்னொரு ஊரறிந்த ரகசியம். நம்மைக் கடன் வாங்கும் பழக்கத்தில் ஆழ்த்திவிட்டு பின்னர் நம்மிடம் விதவிதமான காரணம் காட்டி கந்து வட்டி வசூலிக்கலாம் என்பதுதான் உண்மையான காரணம்.

இணையத்தின் மூலம் பல்வேறு டிக்கட்டுகள் வாங்குவது முதல் நேரடி உபயோகம் வரை எல்லா பரிவர்த்தனைகளுக்கும் டெபிட் கார்டுகளை அனுமதிக்கும்நிலை இன்னும் ஏற்படவில்லை. உண்மையில் டெபிட் கார்டுதான் கிரெடிட் காரடை விட நம்பகமானது. பணம் கணக்கில் இருந்தால்தான் டெபிட் கார்டைப் பயன்படுத்த முடியும். கிரெடிட் கார்ட் கடன் வாங்கி செலவு செய்யும் வேலைதான்.

ஆனால் கடன் வாங்கி செலவு செய்யும் நுகர்வு மெஷின்களாக நம்மை மாற்ற நினைக்கின்றன வங்கிகள். அதனால்தான் அடிக்கடி போன் செய்து கிரெடிட் கார்டு வாங்கிக் கொள்ளும்படி நம்மை தொல்லை செய்கின்றன. உள் நோக்கம் ந்சம்மைக் கடனாளியாக்கி வட்டி வசூலிப்பதுதான்.

என் மருத்துவ நண்பர் ஒருவர் தமிழக அரசில் சுமார் 20 வருடங்களாகப் பணியாற்றிவருகிறார். அவரை கிரெடிட் கார்ட் வாங்கிக் கொள்ளும்படி தொலைபேசியில் பல வங்கிகள் தொல்லை செய்கின்றன. வேண்டாம் என்று சொல்லி வந்தவர் இணையத்தில் பல்வேறு டிக்கட்டுகள் வாங்க, கட்டணங்கள் செலுத்த கிரெடிட் கார்ட் பயன்படுமே என்பதால், கடைசியில் ஒரு வங்கியிடம் ஓகே என்றார். உரிய படிவங்களை எல்லாம் நிரப்பி விண்ணப்பித்தபிறகு வங்கி அவருக்கு கடிதம் அனுப்பியது. கடன் வாங்கும் தகுதி அவருக்கு இல்லை என்பதால் கிரெடிட் கார்ட் தர இயலாது என்று கடிதம்.

ஏன் அவருக்கு கிரெடிட் ஒர்த்திநெஸ் இல்லாமற் போய்விட்டது ?

மாதம் சுமார் 35 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குபவர். கிரெடிட் கார்டில் அதிகபட்சம் எவ்வளவு வரை கடன் தேவை என்று விண்ணப்பத்தில் கேட்டதற்கு ஒரு லட்சம் இரண்டு லட்சம் என்று சொல்லாமல், 25 ஆயிரம் வரை போதும் என்று சொல்லியிருந்தார். தன் ஒரு மாதச் சம்பளத்தை விட அதிகமாகக் கடன் வாங்கக்கூடாது என்று அவர் கருதியதே காரணம். ஆனால் அதை வங்கி மதிக்கவில்லை. இதுதான் நேர்மையாக இருப்பவர்களுக்கு நம் அமைப்பு தரும் மரியாதை. அவர் 2 லட்சம் வரை கிரெடி வாங்கிக் கடனாளியாகி வட்டி கட்டி அழிவதையே வங்கிகள் விரும்புகின்றன.

ரகசியம் 3

மது கோடாவை அவன் இவன் என்றெல்லாம் எழுதுகிறீர்களே நியாயமா என்று ஒரு நண்பர் கேட்டார். நான் ஜார்கண்டில் இல்லை என்ற வசதியில்தான் அப்படி எழுத முடிந்தது. இங்கே இருக்கும் ஊழல் அரசியல் தலைவர்களையும் நியாயபடி அவன் இவன் அவள் இவள் என்றுதான் எழுதவேண்டும். ஆனால் முடியாதே.

நம் மொழிப் பழக்கமே நம்மை கோளாறானவர்களாக்கி வைத்திருக்கிறது. பூக்காரி, டிரைவர், காய்கறி விற்பவர் போன்ற சமூகத்தின் அடிமட்ட உழைப்பாளிகளை எல்லாம் அவன் இவள் என்றுதான் சொல்லுகிறோம். நேர்மையாக இல்லாவிட்டாலும் கூட, உயர் பதவிகளில் இருப்பவர்களுக்குர்விகுதி. அதை எழுத்து நாகரீகம், சபை நாகரீகம் என்று சொன்னால், அந்த நாகரீகம் சாதாரண உழைப்பாளிகளுக்கு மட்டும் பொருந்தாதா ?

மது கோடா மீதான எந்த வழக்கும் தண்டனை வரை போகப் போவதில்லை. அடுத்த தேர்தலில் அவன் ஜெயித்தால் எல்லா வழக்கும் அவ்வளவுதான், இது உங்களுக்குத் தெரியாதா என்று கேட்டார் இன்னொரு வாசக நண்பர். இதுவும் ஊரறிந்த ரகசியம்தான். அரசியல்வாதிகள், அதிகாரிகள் மீதான் ஊழல் வழக்குகள், கொலை வழக்குகள் எதிலும் அவர்கள் கடைசியில் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்பது ஊரறிந்த ரகசியமாக இருக்கிறது.

இந்தச் சமூகத்தில் மது கோடாக்கள் தண்டிக்கப்பட்டு சிறைக்குச் செல்வார்கள் என்ற நம்பிக்கை இப்போதைக்கு எனக்கும் இல்லை. அரசியல்வாதிகள், அதிகாரிகள் போல நீதிபதிகளிலும் நேர்மையானவர்கள் மைனாரிட்டிகளாகவே இருக்கும் தேசம் இது. காசியாபாதில் ப்ராவிடண்ட் நிதி பணத்தை மோசடியாக எடுத்து ஊழல் செய்த வழக்கில் ஒரு உச்ச நீதி மன்ற நீதிபதி, ஏழு அலகாபாத் உயர் நீதி மன்ற நீதிபதிகள், பல மாவட்ட நீதிபதிகள் குற்றவாளிகளாக அடையாளம் காட்டப்பட்டனர். அடையாளம் காட்டிய நீதி மன்ற ஊழியரும் மோசடிக் குற்றத்துக்குள்ளானவருமான அஷுடோஷ் அஸ்தானா சிறைக்குள்ளேயே மர்மமான முறையில் போன மாதம் செத்துப் போனார்.

இந்த நிலைமைகள் எப்போது மாறும் ? ஊழல் பேர்வழிகளைப் பொது மேடைகளில் பார்த்தாலே காறி உமிழும் மன தைரியம் நம் மக்களுக்கு எப்போது வரும் ? அவ்ர்களோடு மேடைகளைப் பகிர்ந்துகொள்ளும் அறிவுஜீவிகளை, அண்டிப் பிழைக்கும் இண்டெலக்சுவல்களைக் கண்டதும் காறி உமிழும் மக்கள் எப்போது உருவாவார்கள் ?

முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா என்று எழுதிய பாரதிக்குக் கூட தன் காலத்தின் பெரியவர்கள் மீது நம்பிக்கை இல்லை. அடுத்த தலைமுறைகளுக்குத்தான் சொன்னான். அந்தத் தலைமுறைகள்தான் நம்மை இன்றைய நிலையில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றன.

இன்றைய குழந்தைகள் காலத்தில் மாற்றம் வருமா?

இந்த வாரப் பூச்செண்டு

தன்

74வது வயதில் போர் விமானத்தில் பயணம் செய்து கலாமுக்கு நானும் சளைத்தவர் அல்ல என்று நிரூபித்திருக்கும் குடியரசுத் தலைவி பிரதீபா பாட்டீலுக்கு .வா.பூச்செண்டு,

இந்த

வாரத் திட்டு

ஒரு

பக்கம் சமச்சீர் கல்வி என்று பேசிக் கொண்டு இன்னொரு பக்கம் கீழ்ப்பாக்கம் பகுதியில் ஆக்ரமிப்பு அகற்றல் என்ற பெயரில் 1500 ஏழை பள்ளிச் சிறுவர்களை 30 கிலோமீட்டருக்கு அப்பால் தூக்கியடிக்கும்தமிழக அரசுக்கு .வா.தி,

இந்த

வார பல்டி

எல்லா

வேட்பாளர்களையும் நிராகரிக்கும் உரிமையை வாக்காளர்களுக்குக் கொடுத்திருக்கும் 49 பிரிவை நீக்க வேண்டும் என்று சில வருடங்கள் முன்பு சொன்ன டாக்டர் ராமதாஸ், இப்போது திருச்செந்தூர் ,வந்த வாசி இடைத்தேர்தல்களில் தன் கட்சியினர் 49 ஓவைப் பயன்படுத்துவார்கள் என்று அறிவித்திருக்கிறார்

.குமுதம் 28.11.2009